திங்கள், 26 பிப்ரவரி, 2024

12. தவக்காலம், இரண்டாம் வாரம் - 27.02.2024 'அறிவுரையைக் கேளுங்கள்'


 எசாயா 1:10.16-18 - நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்

திருப்பாடல் 50: - தம் வழியை செம்மைப்படுத்துவோர், கடவுளின் மீட்பைக் காண்பர்

முத்தேயு 23:1-12 - அவர்கள் சொல்வார்கள் செய்ய மாட்டார்கள்

சொல்பவரெல்லாம் செய்பவராக இருந்தால், இந்த உலகத்தில் தீமையே இருக்காது. இங்கே சொல்பவர்கள்தான் அதிகம். ஏன் இந்த மயக்கம்? நல்லது மற்றும் நீதியானது அனைவரும் கண் முன்னாலேயே தெரிகிறது, ஆனால் அதனைச் செய்ய முனைகிறபோது பலவற்றை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், இடத்தை தக்க வைக்கவும், சுகபோகங்களைக் காத்துக்கொள்ளவும், இருந்ததையே நடைமுறைப்படுத்த மனம் விரும்புகிறது, இதானல், சரியானது மனதிற்கு தெரிந்தும், பிழையானதையே செய்வது வழக்கமாகிவிட்டது

இயேசுவுடைய காலத்தில் பரிசேயர்களும், மறைநால் அறிஞர்களும், பணியிலிருந்தார்கள். இந்த பரிசேயர்கள், ஒரு பொதுநிலையினர் குழுவாக, இயேசுவுடைய காலத்தில் மிகவும் பிரசித்திபெற்றவர்களாக இருந்தார்கள். மக்கள் இவர்களை கதாநாயகர்களாக பார்த்தார்கள். இவர்கள் உலக காரியங்களை வெறுத்து, சதுசேயர்கள் என்ற தலைமைக் குருக்களைச் சார்ந்த பிரிவினரை எதிர்த்து, மோசேயின் சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் காலப்போக்கில், இவர்கள் மக்களை திருப்திப்படுத்துவதற்கு முக்கியம் கொடுக்காமல், தங்கள் சட்டங்களையும், தங்களை பரிசேயர்களாக மாற்றிய ஒழுங்குமுறைகளை மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்கள். இதனால்தான் இவர்களின் வாழ்க்கை முறை, மக்களுக்கு பாரமாக உள்ளது என்று ஆண்டவர் சாடுகிறார்

மறைநூல் அறிஞர்கள் என்ற இந்த படித்த சமூகம், பழைய ஏற்பாட்டின் இறுதிக் காலத்தில் வளர்ந்திருக்க வேண்டும். பபிலோனிய அடிமைத்தனத்தில், இவர்கள் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருந்திருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும், இறைவார்த்தைக்கு அர்ப்பணித்தவர்கள். இவர்களும், காலம் செல்லச் செல்ல, இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை விட்டுவிட்டு, தங்க்ள தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், தங்களுக்கு தெரிந்தபடி, இறைவார்த்தைக்கு விளக்கம் கொடுக்க முயன்று, இயேசு ஆண்டவரின் பார்வைக்கு ;ளளாகிறார்கள்

இப்படியாக, நல்லதற்காக தொடங்கப்படுகின்ற சபைகள், தீமையிலே அழிந்து போகின்றன. நாம் நல்லதை நினைக்கலாம், அதனை செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும். நல்லதை செய்ய விரும்பலாம், நிச்சயமாக அதனை செய்யவே வேண்டும. நல்லதை செய்வோம், அதனை இன்றே செய்வோம். தவக்காலம் அதற்கு நமக்கு உதவட்டும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...