புரட்டாதி 18ம் நாள், புதன், 2025, மத்தேயு 6:1-6,16-18
முக மலர்ச்சி கடவுள் மனிதருக்கு கொடுத்த மாபெரும் கொடை. உலகிலுள்ள உயிரினங்களுக்குள்ளேயே, மனிதருக்குத்தான் முகபாவனை ஒரு கொடையாக கொடுக்கப்பட்டது என்கின்றார்கள் உளவியலாளர்களும், மானிடவியலாளர்களும். மனிதரின் பரினாமத்தின் உச்சமே அவர்களின் வதன மொழி எனவும் நம்பப்படுகிறது. இறையியலாளர்கள் இதனை, மனித ஆன்மீகத்தின் இயல்பு என்கிறார்கள். எப்படியாயினும் முகமலர்ச்சி என்பது ஒரு ஆன்மீக வளர்ச்சியே. 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்கிறது நம் முதுமொழி ஒன்று. ஆக முகமலர்சி ஒரு கொடை என புலப்படுகிறது. இப்படியிருக்க சிலருடைய முகங்களில் எப்போதுமே வரட்சி இருப்பது யோசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். சில உடலியல் பலவீனங்கள் அல்லது, மாற்றுத் திறனால், முக வரட்சி காணப்படுவது இயற்கைதான், முகத்தை விகாரமாக அல்லது, மலர்சியில்லாமல் வைத்துக்கொண்டு, அதனால் பல செய்திகளை சொல்ல விளைவதைப் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் துன்பத்திலும் மலர்ச்சியை கடைப்பிடிக்க வல்லவர்கள் என்பது ஒரு நற்செய்தி அறிவிப்பு. தமக்குள் வாழும், கிறிஸ்துவின் பொருட்டு, ஒருவர் தம் வதனத்தை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.
வளமையிலும் வாழவும், வறுமையிலும் வாழவும் கற்றுக்கொள்வோம். முகமலர்சியோடு துன்பத்தையும் எதிர்கொள்வோம். கிறிஸ்துவிற்கு புகழ்.
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர். தி.பா 112:1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக