புரட்டாதி 19ம் நாள், வியாழன், 2025, மத்தேயு 6:7-15
உண்மையும் நீதியும் உலகைக ஆட்சி செய்தால் எப்படியிருக்கும். இது ஏதோ நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத சிந்தனை போன்று இன்று பலருக்கு தெரியலாம். ஆனால், நம் உலகிலுள்ள அனைத்து கலாச்சாரங்கள், ஆன்மீக சிந்தனைகள், மற்றும் மதங்களை எடுத்து நோக்கினால், உண்மையும், நீதியும்தான் அனைத்திற்கும் அடித்தளம் என்பது புலப்படும். ஆனால் மனிதர்கள் நாகரீகம் அடைய, இந்த அடிப்படை இயல்புகளும், துர்ரதிஸ்ட வசமாக மாற்றம் அடைந்து அல்லது சார்புள்ளதாக மாறிவிட்டது, இது ஒரு சாபம்.
இன்று உண்மையையும், நீதியையும், பணமும், அபிவிருத்தியும் தீர்மாணிக்கும் துன்பமான நியதிற்குள் நிற்கின்றோம். உண்மையும், நீதியும் இடத்திற்கிடம், காலத்திற்கு காலம், மொழிக்கு மொழி, சமயத்திற்கு சமயம், ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என்று மாற்றமடையாது. உண்மையும் நீதியும் தன்னிலே வாழக்கூடியவை. விவிலியம், உண்மையையும் நீதியையும் கடவுளின் அசைக்க முடியாத பண்புகளாக காட்டுகிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று, அதனை கடவுளாகவும் காட்டுகின்றன வேறு மதங்கள். இதன் மூலமாக இந்த பண்புகள் இல்லாத உலகு நிச்சயமாக அழிந்துவிடும் என்று எச்சரிக்கின்றன.
நம் ஆண்டவர் தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்த செபத்தில் இதனைத்தான் ஆணித்தரமாக சொல்கிறார். 'உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக்'. பவுலுடைய வரிகள் எத்துனை அழகாக உள்ளன, 'கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம். அல்லேலூயா.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக