ஆனி 20ம் நாள், வெள்ளி, 2025, மத்தேயு 6:19-23
செல்வமும் உள்ளமும்.
செல்வம் பற்றிய உண்மையான புரிதல், இந்த உலக்திற்கு நிச்சயமாக விடிவதைத் தரும். செல்வம் என்றால் என்ன? செல்வம் யாரிமிருந்து வருகின்றது? யாருக்கு செல்வம் கிடைக்க வேண்டும்? யார் செல்வத்தின் அதிபதி? இதற்கு பூரணமான விடை ஒருவரின் இயல்பிலிருந்தே பிறக்க வேண்டும். இன்று, ஆண்டவர் இயேசு விண்ணக செல்வத்தை பற்றி பேசுகிறார்.
சிலருக்கு கல்விச் செல்வம், சிலருக்கு பணம், ச்pலருக்கு உறவு, சிலருக்கு நட்பு, சிலருக்கு நாடு, சிலருக்கு தேசியம், சிலருக்கு மொழி, கலாச்சாரம், சிலருக்கு திறமை. ஆனால் இவைகள் எல்லாம் செல்வமா? இவை செல்வமாக இருந்தால், இதன் அதிபதியான கடவுள், ஏன் செல்வமாக கருதப்படுவதில்லை? ஏன் இந்த செல்வத்தைக் கொண்டு, செல்வத்தின் அதிபதியை அடைய அல்லது வாங்கிக் கொள்ள, செல்வர்கள் முன்வருதில்லை? இந்த கேள்விக்கான விடைகள், அதற்குள்ளேயே உள்ளன.
இயேசுவே உண்மையான செல்வம். மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர், இயேசுவை செல்வமாக கருதியவர்கள், தங்க்ள உலக செல்வங்களை விற்று, உண்மை செல்வம் இயேசுவை வாங்கினார்கள். இன்று, உண்மை செல்வமாகிய இயேசுவை விற்று, உலக செல்வங்களை வாங்க முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் வறியவர்களாகவே இருக்கப் போகிறார்கள். ஏழைகள், ஆனாதைகள், ஏதிலிகள், வெளிநாட்டவர், வீடற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், நாடற்றவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், நோயாளிகள், அகதிகள், இவர்கள்தான் செல்வர்கள், ஏனெனில் கடவுள் அவர்கள் பக்கம். இவர்களை இந்நிலைக்கு உட்படுத்துகிறவர்கள், அல்லது இந்த துன்பத்தை வியாபாரமாக்குகின்றவர்கள்தான் உண்மையான வறியவகள், ஏனெனில் அவர்களிடம், செல்வமாகிய இயேசு இல்லை.
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக