சனி, 21 ஜூன், 2025

ஆனி 22ம் நாள், ஞாயிறு, 2025, லூக்கா 9:12-17



ஆனி 22ம் நாள்ஞாயிறு, 2025, லூக்கா 9:12-17


கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா


நற்கருணையை நாம் பல பெயர்களில் அழைக்கின்றோம். அதிலே மிக முக்கியமானது 'முதல் நன்மை'. இதன் அர்த்தம் என்வென்பது பல ஆண்டுகளாக, மனதில் உதிக்கும், முழுமைபெறாத விடை. அதுவே நன்மைகளுக்கெல்லாம் நன்மைபோல. ஒரு தந்தையாக தாயாக பிள்ளைகளுக்கு நன்மைகளை மனதில் நினைக்கின்றோம். பலவகையான உலக, ஆன்மீகம் சார் நன்மைகள் உள்ளன. எல்லாவற்றையும் கொடுத்திட விருப்பம்தான். ஆனால் அழியாத, குறைவுபடாத நன்மைதனம் ஒன்று உண்டா, அது என்ன, அதுவே கிறிஸ்து ஆண்டவர். இயேசுவை விட பெரிய நன்மைத்தனம் உண்டா, இருக்கவே முடியாது


இன்று ஆண்டவரின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை கொண்டாடும் போது, நம்முடைய முதல் நன்மை நாளை மனதில் கொண்டுவருவோம். அந்த நாள் வாழ்வில் பல அனுபவங்களைக் கொண்டுவந்தது. மகிழ்சியை நிறைவைக் கொண்டுவந்தது. ஆன்றைய நாளில் எடுத்துக்கொண்ட புகைப்படம், பெற்றுக்கொண்ட செபமாலை, வாழ்த்துச்சொல்லிய குரல்கள், கரங்களில் தவழ்ந்த சான்றிதழ், என்னிப்பார்க்கவே மகிவும் இனிமையாக இருக்கும்

இது ஒருபுறம் இருக்க, இந்த உலகில் கத்தோலிக்கர் அனைவரும், முதல் நன்மை தொடங்கி, நற்கருணையை பெற்றுக்கொள்கிறார்கள். சாதாரணமாக உணவு ஒருவருடைய உடலிலும், வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் இந்த நற்கருணை எத்தனைபேருடைய வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டவருடைய திருவுடலும் திரு இரத்தமும், வெறும் வழிபாடகவே மறைந்து போகிறதை சகிக்க முடியாது. நற்கருணை ஒரு வாழ்வின் சடங்கு, அது நிஜயத்தின் வழிபாடு

நற்கருணை வாழ்வாகினால், இவ்வுலகில் துன்பமும், துயரமும், போர்களும், பிரிவினைவாதங்களும், அழிவுகளும் எப்போதே அழிந்து போயிருக்கும். நற்கருணை ஆண்டவருக்கு தோத்திரம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆனி 27ம் நாள், வெள்ளி, 2025, லூக்கா 15:3-7 திரு இருதய ஆண்டவர் பெருவிழா: ஆடுகளும் மந்தைகளும்.

ஆனி 27 ம் நாள் ,  வெள்ளி , 2025, லூக்கா 15:3-7 திரு இருதய ஆண்டவர் பெருவிழா : ஆடுகளும் மந்தைகளும் .  மத் 11: 29 அல்லேலூயா , அல்லேலூயா...