ஆனி 23ம் நாள், திங்கள், 2025, மத்தேயு 7: 1-5
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. அல்லேலூயா.
தீர்ப்பளிக்கதீர்கள், தீர்ப்புக்கு உள்ளதீர்ள்.
மற்றவர்களுக்கு தீர்ப்பளிப்பதில் என்னவெரு ஆனந்தம் நமக்கு! ஏன் இந்த மனநிலை? இன்றைய நற்செய்தியின் வரிகள் இயேசு ஆண்டவருடைய காலத்தில் இருந்த நிலையையும், அது தொடர்ந்து நம் காலத்திலும் இருக்கப்போகிறது என்பதைம் காட்டுவதைக் அவதானிக்கலாம். இன்றைய உலகில் முன்னெடுக்கப்படும், அனைத்துவிதமான போர்களுக்கும் காரணம், 'நான் சரி, நீ பிழை' என்ற சுயநியாயப்படுத்தல் என்ற மனநோய்தான்.
இன்றைய முதலாம் வாசகம், ஆபிராமை ஓர் நம்பிக்கைவாதியாக மட்டுமா காட்டுகிறது. அவர் நம்பிக்கையின் தந்தை மட்டுமல்ல மாறாக திருப்பயணத்தின் தந்தையும் கூட. தனக்கு தெரியாத கடவுள், தனக்கு தெரியாத நிலம், தானறியாத மொழி-இன-கலாச்சாரம், இருந்தாலும் சென்றார், இன்று வரலாற்றில் நிலைத்திருக்கிறார். இந்த ஆபிரகாமுடைய விழுமியத்தை புரிந்துகொள்ளாமல், அவரைப் பற்றி பல புராணக் கதைகளை புனைந்து, அவருக்கு பல புதிய பெயர்களைக் கொடுத்து, அவர் பெயரில் மதத்தையும், இதிகாசங்களையும், கட்டுக்கதையும், தத்தமது சொந்த மத மற்றும் அரசியல் தேவைகளுக்காக செய்து வெற்றி கண்டிருக்கிறது இந்த உலகம். ஆபிரகாமிடமிருந்து எதைக் கற்றுக்கொண்டோம்?
ஒருவர் தன்மை முழுமையாக அறிந்துகொள்ளாவிடில், அவர் ஆரோக்கியமானவராக இருக்கப்போவதில்லை. அவர் தனக்கும், அயலவருக்கும் ஆபத்தானவராகவே இருப்பார். தன்னை அறிந்தவர் மட்டும்தான் தன் பலவீனங்களை நிவர்த்தி செய்ய முயல்வார், மற்றவர்களின் பலவீனங்களுக்கு தீர்வினைக் கொடுக்கக்கூடியவராக இருப்பார். தீர்ப்பிடாமல் இருக்க முயல்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக