ஆனி 26ம் நாள், வயாழன், 2025, மத்தேயு 7: 21-29
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
இன்றைய நற்செய்தி சொல்லும், 'வீடு' (οἰκία; ழமையை, ழமையைள,) எதைக் குறிக்கிறது. வீடு என்பது ஒருவருடைய வாழ்வையும் உலகத்தையும் குறிக்கும். இயேசுவைப் பற்றி தெரிந்தவர்கள், திரு அவையிலும் கிறிஸ்தவத்திலும் கோடிக்கணக்காக உள்ளார்கள். ஆனால் இயேசுவைத் தெரிந்தவர்கள் எத்ததைபேர் மேல்சொன்ன குழுக்களில் உள்ளார்கள்? ஆச்சரியமாக இந்த இரண்டு சமூகத்தையும் சாராமல் பலர் இயேசுவை அதிகமாக தெரிந்துவைத்துள்ளார்கள். இவர்கள் உண்மையிலே பாறை என்கின்ற இயேசுவை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இயேசுவைப் பற்றி இவர்களுக்கு தெரியாது, அது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் தாராது என நினைக்கின்றேன். ஆனால், வாய்ப்பிருந்தும் இயேசுவை தெரியாமல் இருப்பது ஆபத்துதான். பல கோடி கிறிஸ்தவர்கள், இயேசுவை அறியாமலேயே தம் இவ்வுலக வாழ்வை இழந்து போகிறார்கள்.
நம் வாழ்வாகிய வீட்டை செல்வத்தில், கல்வியில், அரசியலில், சாதி பிரிவினையில், பாகுபாட்டில், இஸ்டப்பட்டவர்களில் கட்ட முயல்வது, மணல் மீது வீடு கட்டும் அறிவில்லாதவர்களை குறிக்கிறது என்பதை இன்று மனதில் கொள்வோம். வீடு கட்டுவது இலகு, ஆனால் அந்த வீட்டை யாரில் கட்டுகிறோம் என்பது மிக முக்கியம். நல்ல வீடு கட்டுவோம் வாங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக