வெள்ளி, 27 ஜூன், 2025

ஆனி 27ம் நாள், வெள்ளி, 2025, லூக்கா 15:3-7 திரு இருதய ஆண்டவர் பெருவிழா: ஆடுகளும் மந்தைகளும்.



ஆனி 27ம் நாள்வெள்ளி, 2025, லூக்கா 15:3-7


திரு இருதய ஆண்டவர் பெருவிழா: ஆடுகளும் மந்தைகளும்


மத் 11: 29

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


விவிலியத்தில் ஆடுகள்-மந்தைகள்-ஆயர்கள் உவமை தவிர்க்கப்படமுடியாதவை. கடவுள் தன்னை பல வகையாக உருவகங்களில் வெளிப்படுத்தினாலும், அவர், 'ஆயர்' என்று தன்னை வெளிப்படுத்துவதை எந்த உருவகமும் மேற்கொள்ள முடியாது. அந்தளவிற்கு, இந்த ஆயன் உருவகம், மிக தனித்துவமும் இனிமையானதும் கூட. தான் ஆயனாக இருப்பது போல, தான் உருவாக்கி அழைத்த தலைவர்கள், அரசர்கள், நீதிபதிகள், குலமுதுவர்கள், இறைவாக்கினர்கள், அனைவரும் ஆயர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கின்றார். ஆரம்பத்தில் விவிலியம் 'நல்ல ஆயர்' என்ற சொல்லை வெளிப்படுத்துவது இல்லை, ஏனெனில் எல்லா ஆயர்களும், நல்ல ஆயர்களாகவே இருக்க அழைக்கப்படுகிறார்கள். ஆனால் எப்போது இவர்கள் தங்கள் அழைப்பிற்கு பிரமாணிக்கமில்லாமல் வாழ தொடங்கினார்களோ, அப்போதிலிருந்துதான், 'நல்ல ஆயன் நானே' என்று கடவுள் தன்னை இந்த வட்டத்திற்குள் கொண்டுவந்தார்

உலக ஆயர்கள், தங்கள் மக்கள், கால்நடை மந்தைகளாக, செம்மறிகளாக, கீழ்ப்படிவுள்ளவர்களாக, தியாகிகளாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்களே தவிற, தாங்கள் நல்ல ஆயர்களாக இருக்க முயற்சி செய்வதில்லை. பதவிக்கு வருவதற்கு முன், சமூக சீர்திருத்தவாதிகளாக, முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக, புரட்சி குரல்களாக, குரல் கொடுக்கிறவர்கள், பதவி கிடைத்ததும், தங்களுக்கு முன்னிருந்தவர்களைக் காட்டிலும், மிக கொடுக்கோலர்களாக மாறிவிடுகிறார்கள், அந்த மாற்றத்திற்கு பழைய புதிய காரணங்களையும் கொடுப்பார்கள், அல்லது கண்பிடிப்பார்கள். ஆச்சரியம், ஆனால் உண்மை, தங்கள் பதவி காலம் நிறைவடைந்த பின்னர்சிலர் இந்த பதவி காலத்தை இழுத்தடிப்பும் செய்யவார்கள் அதுவேற கதை, புதிதாக பதவிக்கு வருகின்றவர்களை முன்னைய நாட்களைப் போல குறைசொல்ல தொடங்கி தங்கள் புரட்சிக் குரலை தூசி தட்டி மீண்டும் எழுப்பிவிடுவார்கள், இவர்கள் சிறந்த நடிகர்கள்

இது ஒருபுறம் இருக்க, மந்தைகள், விவிலிய மந்தைகளைப் போலல்லாமல், எல்லாவற்றிக்கும் ஆயர்களையே நம்பி, பொறுப்பற்றவர்களாக, சுதந்திரத்தை பயன்படுத்த தெரியாதவர்களாக, சமூக அக்கறையற்றவர்களாக, மூட நம்பிக்கை மற்றும் புராண கதைகளால் ஈர்க்கப் பெற்றவர்களாக தொடர்ந்து சவுக்கியமாக வாழ முயல்கிறார்கள். மேற்சொன்ன ஆயர்கள் எவ்வளவு ஆபத்தானவர்களோ, அவர்களுக்கு இனையாக இந்த மந்த புத்தியுள்ள ஆடுகளும் வருவார்கள், வருகிறார்கள்

ஆயர்கள் மட்டுமல்ல, ஆடுகளும் நல்ல ஆடுகளாக மாறவேண்டும். இங்கே பதவி கிடையாது, அனைத்தும் பொறுப்புக்கள் என்பதை மனங்கள் உணர வேண்டும். அனைவரும் நல்ல ஆயராம் இயேசுவை பின்பற்ற வேண்டும். ஆயர்கள் மட்டுமல்ல, ஆடுகளும் இயேசுவின் திரு இருதயத்தை பின்பற்ற வேண்டும். திருநாள் வாழ்த்துக்கள்


———————————————

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆனி 27ம் நாள், வெள்ளி, 2025, லூக்கா 15:3-7 திரு இருதய ஆண்டவர் பெருவிழா: ஆடுகளும் மந்தைகளும்.

ஆனி 27 ம் நாள் ,  வெள்ளி , 2025, லூக்கா 15:3-7 திரு இருதய ஆண்டவர் பெருவிழா : ஆடுகளும் மந்தைகளும் .  மத் 11: 29 அல்லேலூயா , அல்லேலூயா...