புரட்டாதி 17ம் நாள், செவ்வாய், 2025, மத்தேயு 5:43-48
யார் பகைவர்? பகைவர்கள் எங்கிருந்து தோன்றுகின்றார்கள்? பகைமையை வளர்ப்பது என்ன?
ஏன் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அன்பிற்கும், மரியாதைக்கும், சகிப்புத் தன்மைக்கும் கொடுக்கப்படுவதில்லை? இப்படிக் கேள்விகள் ஆயரம்.
மனித உள்ளங்கள் ஒர புறம் கடவுளின் சாயலைக் கொண்டு, அமைதியையும், ஆன்மீகத்தையும் தேடும் வேளை, இன்னெரு புறம், அது இன்னும் தன் மிருக சாயலுக்கு உரத்தையும், உணவையும் விட்டுக் கெண்டுதான் உள்ளது. இந்த மிருக குணம், அதன் ஆரம்ப கால வேட்டையாடும் இயல்பை தன்னகத்தே கொண்டுள்ளது. காட்டிலே மிருகங்கள் தக்கிப் பிழைக்கும், வேட்டையாடி வாழும். அதற்கு எதிரிகள்தான் அதிமாக இருப்பார்கள். சிலவேளைகளில் தன் குடும்பத்தையே, அல்லது உறவுகளையே உணவாக்கவும் தயங்காது. மனிதர்களும் காட்டிலிருந்துதான் வந்தார்கள், இப்போது எங்கோ சென்று விட்டார்கள், செயற்கையாக காடையும் உருவாக்கும் அளவிற்கு அவர்களின் மெய்யறிவு வளர்ந்திருக்கிறது. . செயற்கை நுன்னறிவு இயற்கையையே ஆச்சரியப்படவைக்கிறது. இருந்தாலும் மிருக குணம் மாறாமல் இருப்பது, இன்னும் ஆச்சரியமாக உள்ளது.
காரணம்! போட்டி மன்ப்பான்மை, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, பிழையான கட்டுகதைகளின் அடிமைத்தனம், பேராசை பேன்றவற்றில் இருந்து மனங்கள் விடுபட்டால் ஒழிய, இந்த மனிதர்களையும், இந்த உலகையும் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். (தி.பா 146)
May Peace prevail and rule the world. Amen.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக