புதன், 5 ஜூலை, 2017
பன்றிக் கூட்டங்கள்

இது இப்படியிருக்க ஏன் கெதரேனர் பகுதியில் மக்கள் பன்றிக் கூட்டத்தை வளர்த்தார்கள்? ஏன் இந்த பன்றிக்கூட்டம் கடலினுள் விழுந்தபோது அவர்கள் பயமும் கோபமும் கொண்டார்கள்? ஏன் அவர்கள் இயேசுவை தங்கள் பகுதியினுள் இருந்து வெளியேறக்கேட்டார்கள்? (மத் 8,28-34). பேய்களுக்கு தெரிந்திருந்தது இவர் இறைமகனென்று மக்களுக்கு தெரியவில்லையே!!!, அதாவது அந்த கெதரேனர் பகுதி மக்களுக்கு தெரியவில்லை என்கிறார் மத்தேயு.
பன்றி இறைச்சி சாப்பிடுகிறவர்களுக்கு தெரியும், அதன் சுவை எப்படியென்று. அனைத்து தமிழர்களும் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை என்றாலும், அதிக எண்ணிக்கையானவர்கள்
இந்த இறைச்சியை சாப்பிடுகிறார்கள். உலகிலே சில இடங்களில் நாய், பூனை, பாம்பு போன்ற விலங்குகளும் இறைச்சிக்காக அடிக்கப்படுகின்றன. சிலருக்கு இவை சுவையான உணவு, சிலருக்கு அருவருப்பு. சிலருக்கு இவை மிருக வதைகள். யார், சுவையையும் அருவருப்பையும் தெரிவுசெய்வது? இதற்கு விடைகாண்பது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் குறிப்பிட்டவர்களுடைய அருவருப்பையும், சுவையையும் அனைவருக்கும் ஏற்புடையதாக்குவது ஒருகாலத்திலும் நீதியாகாது என நினைக்கிறேன். மாட்டிறைச்சி சாப்பிடாதே! அல்லது சாப்பிடு! என்று யார் சொல்லவது, மாடு மட்டும் சொல்லாம் என நினைக்கிறேன். பன்றி இறைச்சி சாப்பிடாத சிலர் பன்றியைப் போல அசுத்தத்தோடு சௌகரிகமாக வாழ பழகியிருக்கிறார்கள். பன்றி என திட்டுபவர்கள் அதிகமான வேளைகளில் பன்றியைவிட உள்ளத்தாலும் உடலாலும் சாக்கடையாக இருக்கிறார்கள். இதனால் பன்றியை இழுத்து, அசுத்தத்தை பற்றி பேச பன்றியை தவிர யாருக்கும் உரிமை இல்லை என நினைக்கிறேன்.
சரி பன்றி அசுத்தமானது என்ற நம்முடைய வியாக்கியானம் பன்றிக்கு தெரியுமா?
ஜெகன்குமார் அமதி
அமைதியகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக